3வது சுற்று இலங்கை அமைதிப் பேச்சு நார்வேக்கு மாற்றம்
ஓஸ்லோ:
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நார்வே தலைநகர்ஓஸ்லோவில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.
இதில் பங்கேற்க புலிகளின் அரசியல் பிரிவித் தலைவர் தமிழ்ச் செல்வன், கருணா ஆகியோர் தலைமையிலான 5 பேர் குழுவினர்ஓஸ்லோ வந்துவிட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன.
ஆண்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் இங்கிலாந்தில் இருந்து நேராக நார்வே வந்துவிடுவர்.
முதல் இரண்டு சுற்றுப் பேச்சுகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றன. இந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும்அங்கு தான் நடப்பதாக இருந்தது. ஆனால், அந் நாட்டு மன்னரின் பிறந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் விடுமுறைக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நார்வேக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வன்னி காட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புலிகளின் குழுவினர் கொழும்பு வந்தனர். அங்கிருந்து விமானம் முலம் ஓஸ்லோ வந்துசேர்ந்தனர்.
இலங்கை அரசுப் பிரதிநிதிகள் இன்றும் நாளையும் ஓஸ்லோ வந்து சேருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான 4வது மற்றும் 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாங்காக்கிலும் 6வது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் வரும் மார்ச் மாதம் ஜப்பானிலும் நடைபெற உள்ளன.
இதற்கிடையே இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முழு ஆதரவு தந்துள்ள டென்மார்க் அரசு ரூ. 1.5 பில்லியன் உதவியும்செய்ய முன்வந்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கவும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கவும் அடுத்த3 ஆண்டுகளுக்கு இந்த நிதி வழங்கப்படும் என டென்மார்க் அறிவித்துள்ளது.
இந்த நிதி வட கிழக்குப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றப் பயன்படுத்தப்பட உள்ளது.
இது தவிர இலங்கை அரசுக்கு ரூ. 4.5 பில்லியன் கடன் தரவும் டென்மார்க் முன் வந்துள்ளது.