எழும்பூர்-கடற்கரை மீட்டர் கேஜ் மின்சார ரயில் பாதை மூடப்பட்டது
சென்னை:
சென்னை-எழும்பூர், கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையிலான மீட்டர் கேஜ் மின்சார ரயில் போக்குவரத்துஇன்றுடன் நிறுத்தப்பட்டது. இந்தப் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
எழும்பூர்-கடற்கரை சந்திப்பு இடையிலான மீட்டர் கேஜ் பாதை ரூ.30 கோடி மதிப்பில் அகல ரயில் பாதையாகமாற்றப்படுகிறது.
இந்தப் பணிகள் இன்று தொடங்கின. பிப்ரவரி மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து எழும்பூர்-கடற்கரை இடையே மீட்டர் கேஜ் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக அகல ரயில் பாதையில் கூடுதலாக 20 ரயில்கள் விடப்பட்டுள்ளன.
மேலும் கடற்கரை வரை செல்லும் பயணிகளின் வசதிக்காக எழும்பூர் ரயில் சந்திப்புக்கு வெளியே தற்காலிகமாகபுதிதாக ஒரு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 20 பஸ்கள் கடற்கரைக்கு இயக்கப்படுகின்றன.
-->