விரைவில் ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து
சென்னை:
ராமேஸ்வரம், தலைமன்னார் இடையேயும் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பாக இந்திய அரசுக்கும், இலங்கைஅரசுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
அதன் பிறகு உடனடியாக கப்பல் போக்குவரத்து தொடங்கும்.
அதேபோல, ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையேயும் கப்பல் போக்குவரத்து நடத்தப்படும்.
இதுதொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். தனியார் நிறுவனம் இதை நடத்த முன் வந்துள்ளது.
சேது சமுத்திரம் திட்டம் இரண்டு கட்டங்களாக ரூ.500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். வரும் ஏப்ரப்ல மாதம்இதற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் திருநாவுக்கரசர்.
-->