109 மண்டை ஓடுகளுடன் பொதுமக்களை பயமுறுத்திய 7 மந்திரவாதிகள் கைது
தருமபுரி:
கிருஷ்ணகிரி அருகே 109 மனித மண்டை ஓடுகளுடன் பொதுமக்களை மிரட்டி வந்த 7 மந்திரவாதிகளைபோலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே உள்ளது பச்சிகானப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் சமீபத்தில்சிவக்குமார், பழனிச்சாமி, முருகேசன், மணி, ராமலிங்கம், மோகன் மற்றும் நடராஜன் உள்ளிட்ட ஏழுமந்திரவாதிகள் குடியேறினர்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குடிசை போட்டு அங்கு சிலை வைத்து அடிக்கடி பூஜை நடத்தி வந்தனர்.
அந்தப் பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை இந்தப் பக்கம் வரக் கூடாது, வந்தால் ரத்தம் கக்கிச் செத்துவிடுவீர்கள் என்று மனித மண்டை ஓடுகளை காட்டி அந்த மந்திரவாதிகள் மிரட்டி வந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்துமந்திரவாதிகளிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் தங்கியிருந்த குடிசையை சோதனை போட்டுப் பார்த்தபோது, 109 மனித மண்டை ஓடுகள் அங்குபுதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதவிர ஏராளமான பூஜை பொருட்கள், செல்போன், சமையல்பாத்திரங்கள், மான் தோல்கள் ஆகியவையும் அங்கு இருந்தன.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அந்த ஏழு மந்திரவாதிகளையும் கைது செய்தனர்.பூஜைக்காக சுடுகாட்டிலிருந்து இந்த மண்டை ஓடுகளை எடுத்து வந்ததாக மந்திரவாதிகள் கூறினர்.
ஆனால் அவர்கள் நரபலி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து சமீபத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தொடர்ந்து அந்த மந்திரவாதிகளிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
-->