சென்னையில் தொடரும் திருடர்கள் அட்டகாசம்
சென்னை:
சென்னை வேளச்சேரியில் திருடர்கள் தொல்லை அதிகரித்துவிட்டது.
இங்கு பூட்டிய வீட்டை உடைத்துத் திருடுவது தொடர் கதையாகி உள்ளது.
சமீபத்தில் ஒரு தொழிலதிபரின் வீட்டை உடைத்து கைவரிசையைக் காட்டியுள்ளனர் கொள்ளையர்கள்.வேளச்சேரி டாக்டர் சீதாபதி நகர் (இங்குதான் முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலினின் வீடு உள்ளது),உஷா தெருவைச்சேர்ந்தவர் ரமேஷ்.
இவர் ஒரு தொழில் நறுவனம் நடத்தி வருகிறார். ரமேஷின் மனைவி வெளியூர் சென்றிருந்தார். ரமேஷ் மட்டும்வீட்டில் தனியாக இருந்தார்.
இரவு தனது நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தார் ரமேஷ். காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு பாத்ரூம்ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ10,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இது குறித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->