For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை கை அழுகிய விவகாரம்: மனித உரிமை கமிஷன் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அரசு மருத்துவமனையில் வயிற்றுப் போக்கிற்காக சேர்க்கப்பட்ட 8 மாத ஆண் குழந்தைக்கு தவறானசிகிச்சை அளிக்கப்பட்டதால் அதன் வலதுகை முழுவதுமாக அழுகியது. இதனால் அந்தக் கை வெட்டிஎடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் உசேன் என்ற 8 மாத ஆண் குழந்தை வயிற்றுப் போக்குக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சமீபத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் வலது கை நீல நிறத்தைஅடைந்து அழுகத் தொடங்கியது.

இதனால் குழந்தையின் வலதுகை ஆபரேஷன் மூலம் துண்டிக்கப்பட்டது. ரத்த ஓட்டம் தடை பட்டதால் தான் கைஅழுகியதாகவும் லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இது போல நடப்பதுண்டு எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தான் குழந்தையின் கை அழுகியதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டும்எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுவிசாரணை நடந்தது. இருப்பினும் இக் குழுவினர் தங்களது அறிக்கையில், சிகிச்சை குறித்து ஏதும் குறிப்பிடாமல்குழந்தை நன்றாகஉள்ளது, விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று மட்டுமே கூறியுள்ளனர்.

இதன்மூலம் சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்களை காப்பாற்றும் வேலையில் இந்த விசாரணைக் குழுஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதை உணர்ந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தனது கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குனகுத்து மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X