பட்டப் பகலில் பட்டாக் கத்தியால் வெட்டி வக்கீலின் குமாஸ்தா படுகொலை
சென்னை:
சென்னையில் மிகப் பரபரப்பான பாரிமுனைப் பகுதியில் பட்டப் பகலில் வக்கீல் ஒருவரின் குமாஸ்தாவை 4 பேர்கொண்ட கும்பல் பட்டாக் கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்தது.
வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.உயர்நீதிமன்ற வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக இருந்து வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமைகாலை பாரிமுனை நோக்கி வந்து கொண்டிருந்தார் பிரபாகரன்.
முத்தியால்பேட்டை பகுதியில் வந்தபோது, ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரது மோட்டார்சைக்கிளை வழிமறித்தது. அதிலிருந்து இறங்கியவர்கள் தங்களிடம் இருந்த நீண்ட பட்டாக் கத்திகளால்பிரபாகரனை சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்பிரபாகரன்.
பிரபாகரன் 2 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். இதனால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இந்தக்கொலைகளைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
-->