For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடா வழக்கில் கைதான "அல்-உம்மா" பாஷா உள்பட 19 பேர் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கடந்த 1993ம் ஆண்டு கோயம்புத்தூரில் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானஅல்-உம்மா தலைவர் பாஷா உள்பட 19 பேரை விடுதலை செய்து கோயம்புத்தூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனியில் 1993ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஏராளமானவெடிபொருட்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக பாஷா, அல்-உம்மா செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 19 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். தடா சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தடா சட்டம் பின்னர் வாபஸ்பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைதானவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் தொடர்புடைய அனைவரையும் விடுதலைசெய்து தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம்ஆகிய அனைத்துமே தெளிவில்லாமல் இருப்பதால் கைதான அனைவரையும் விடுதலை செய்து தனி நீதிமன்றம்உத்தரவிட்டது.

இதையடுத்து பாஷா உள்ளிட்ட இவர்களில் பலர் மீது கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கு இன்னும்நிலுவையில் உள்ளதால், அவர்கள் மீண்டும் கோயம்புத்தூர் மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X