For Daily Alerts
Just In
ஐயப்ப பக்தர்களுக்காக குமுளிக்கு சிறப்பு பஸ்கள்
மதுரை:
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் கோட்டத்திலிருந்து இந்த சிறப்பு பஸ்கள்இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல், திருச்சி, பழனி, மதுரை ஆகிய இடங்களிலிருந்து வரும் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த சிறப்புபஸ்கள் இயக்கப்படும்.
குமுளி தான் தமிழக எல்லையில் உள்ள முக்கிய நகராகும். அங்கிருந்து தேக்கடி வழியாக கேரளாவுக்குச் சென்றுஐயப்ப பக்தர்கள் பம்பையை அடைய முடியும்.
-->
Story first published: Saturday, December 7, 2002, 5:30 [IST]