For Daily Alerts
Just In
தஞ்சை பெரிய கோவிலுக்கு நைஜீரிய தேக்கில் கொடிமரம்
தஞ்சாவூர்:
பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் நைஜீரிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள தேக்கு மரம் மூலம் புதிய கொடி மரம் நிறுவப்படவுள்ளது.
பெரிய கோவிலின் உள்புறத்தில் உள்ள தற்போதைய கொடி மரம் மிகவும் பழமையானது. இது மிகவும்சேதமடைந்துள்ளது. இதையடுத்து புது கொடி மரம் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நைஜீரியாவில் இருந்து மிக உயர்ந்த தரம் கொண்ட தேக்கு மரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
அந்த மரத்திலிருந்து புதிய கொடி மரம் வடிவமைக்கப்பட்டு கோவிலில் நிறுவப்படவுள்ளது. கொடி மரத்திற்குக்கீழே செப்புக் கலசமும் நிறுவப்படும் என பெரியகோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
Comments
Story first published: Saturday, December 7, 2002, 5:30 [IST]