பஸ்கள் தனியார்மயத்தில் ஊழல் நடக்கலாம்: காங். எச்சரிக்கை
கோவை:
சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்த ஜெயலலிதாவுடன் இனி காங்கிரஸ் எப்போதும் கூட்டணிஅமைக்காது என அக் கட்சியின் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைமையில் 3-வது அணி அமைக்க வேண்டும்என்று கூறி வருகிறார்கள். அப்படி அமைந்தால் அது 3-வது அணியாக இருக்காது. முதல் அணியாக,முதன்மையான அணியாக விளங்கும். பத்தோடு பதினொன்றாக நாங்கள் இனியும் இருக்க மாட்டோம்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ்கட்சி போட்டியிடும். அதிமுகவுடன் இந்தத் தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டோம். எந்தக் காரணம் கொண்டும்அதிமுகவுடனும், ஜெயலலிதாவுடனும் காங்கிரஸ் கட்சி இனி மேல் கூட்டணி வைத்துக் கொள்ளாது.
புது வீராணம் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இன்னும் பல புகார்கள் கூடவரலாம். ஜெயலலிதா அரசு என்றாலே ஊழல் தானே. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை விட்டு விட்டுதெலுங்கு கங்கைத் திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தால் சென்னை நகர மக்களின் தாகம் தீர வழி கிடைக்கும்.
மக்கள் விரோத செயல்களைக் கடைப்பிடிக்கும் அரசாக அதிமுக அரசு மாறி விட்டது. பஸ்களை தனியார்களிடம்ஒப்படைத்தால் அதன் மூலம் 40,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
நஷ்டத்தில் இயங்கும் வழித்தடங்களை தனியார் தருவது என்பது வேறு. ஆனால், லாபத்தில் இயங்குவதை ஏன்தனியாரிடம் தர வேண்டும். இதில் நடக்க உள்ள ஊழல் முறைகேடுகள் என்னென்னவோ தெரியாது என்றார்.
-->