சேலம் உருக்காலைக்கு புத்துயிர்: தமிழக அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை
சேலம்:
சேலம் உருக்காலைக்கு புத்துயிர் கொடுக்க பல்வேறு சலுகைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றுமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் வந்த பாலு அங்குள்ள உருக்காலையை சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த ஆறு வருடமாக சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடுமையான போட்டி, அதிகரித்துள்ளசெலவீனங்கள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டுமானால் இந்த ஆலைக்கு புத்துயிர் ஊட்டுவது அவசியம்.
இல்லாவிட்டால் இந்த உருக்காலை தனியார்மயமாகி விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் உருக்காலைக்கு புத்துயிர் ஊட்டும் பணியை அரசியல் பார்க்காமல் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மின் கட்டணத்தில் சலுகைகள், விற்பனை வரி ரத்து உள்ளிட்ட சில சலுகைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.
இதன் மூலம் இந்த ஆலையை தனியாருக்கு தாரை வார்க்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இந்த ஆலைபொதுத்துறை ஆலையாகவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் பாலு.
-->