For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாவூதின் தம்பி துபாயில் கைது: சி.பி.ஐ. விரைந்தது

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

துபாயில் பதுங்கியுள்ள மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிம் அந் நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.இதையடுத்து அவனை இந்தியாவுக்குக் கொண்டு வர சி.பி.ஐ. குழுவினர் துபாய் விரைந்துள்ளனர்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த தாவூத் இப்ராகிம், அங்கு தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினான். இதன்பின்னர் துபாய்க்குத் தப்பினான். இப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் முழுப் பாதுகாப்பில் கராச்சி நகரில் வசித்து வருகிறான்.

பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்கள் அவனுக்கு பாதுகாப்பு தந்து வருகின்றனர். இதற்குக் கைமாறாய் பேங்க் ஆப் பாகிஸ்தானுக்கு பல நூறுகோடிகளை இப்ராகிம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இவனது தம்பி அனீஸ் இப்ராகிம் மீதும் இந்தியாவில் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் பிறசினிமா துறையினரிடம் பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் அதிபர்களைக் கடத்தி பணம் பறிப்பது போன்ற செயல்களில் இன்னும் தாவூத்கும்பல் ஈடுபட்டு வருகிறது.

இந்த பணம் பறிப்புகளில் தாவூதுக்கு அனீஸ் முழு உதவி செய்து வருகிறான். இவனும் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தான்.

ஆனால், துபாயிலும் தாவூத் கும்பலுக்கு பெரும் சொத்துக்களும் முதலீடுகளும் உள்ளன. இதனை அனீஸ் தான் மேற்பார்வையிட்டுவருகிறான். இவனையும் தாவூதையும் பிடிக்க இன்டர்போல் உதவியை சி.பி.ஐ. நாடியுள்ளது.

இதையடுத்து இவர்களுக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச ரெட் அலெர்ட் அறிவித்திருந்தது. இந் நிலையில் கடந்த மாதம் 29ம் தேதிஅனீஸ் பாகிஸ்தானில் இருந்து துபாய் வந்து இறங்கினான். இதை இந்திய உளவுப் பிரிவினர் உடனே இன்டர்போலுக்குத் தெரிவித்தனர்.இதையடுத்து அவனைக் கைது செய்யுமாறு துபாய் போலீசுக்கு இன்டர்போல் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து அவன் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டான். குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ள இந்தியாவுக்கும் ஐக்கிய அரபுநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இதனால் அனீசை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகளிடம் இந்தியாகோரியுள்ளது.

இதற்காக சி.பி.ஐ. குழு நேற்றே துபாய் போய் சேர்ந்துவிட்டது. கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சுட்டில்தொடர்புடைய ஆப்தாப் அன்சாரியை துபாய் போலீசார் தான் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர். இவனும் தாவூதின் ஆள் தான்.

அதே போல கர்நாடகத்தின் மிகப் பெரிய தாதாவான முத்தப்பா ரை என்பவனும் துபாயில் பதுங்கியபோது அவனைக் கைது செய்துஇந்தியாவிடம் ஒப்படைத்தது அந்த நாடு.

இப்போது அனீசையும் துபாய் இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், இன்னொரு மும்பை தாதாவான அபு சலீம் ஒரு இந்தி நடிகையுடன் போர்ச்சுகல் நாட்டில் பிடிபட்டான். ஆனால், இந்தியாவில்மரண தண்டனை உள்ளதால் அவனை ஒப்படைக்க போர்சுகல் மறுத்து வருகிறது. இப்போது போர்சுகல் சிறையில் உள்ள அவனை இந்தியாகொண்டு வர சி.பி.ஐ. தொடர்ந்து முயன்று வருகிறது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X