புதுப் பொலிவு பெறுகிறது சென்னை ராஜ்பவன்
சென்னை:
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் புத்துயிர் பெறப் போகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தமாளிகையைப் புதுப்பிக்கும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது.
சென்னை கிண்டி தேசியப் பூங்கா வளாகத்திற்குள் ராஜ்பவன் உள்ளது. பரந்து விரிந்த மிகப் பெரிய பூங்காவிற்குநடுவே ஆளுநர் மாளிகை விஸ்தாரமாக அமைந்துள்ளது.
மிகவும் பழமையான இந்த மாளிகை 1837ல் இப்போதைய வடிவத்தில் கட்டப்பட்டது என்று தெரிய வருகிறது.ஆனால் அதற்கு முன்பே சர் வில்லியம் லாங்கார்ன் என்பவர் சென்னை மாகாண கவர்னராக இருந்தபோது இந்தக்கட்டடம் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
அழகுற அமைந்திருக்கும் ராஜ்பவனை புதுப்பித்து புத்துயிர் ஊட்ட அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கட்டுமானப்பொறியியல் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து முடிவு செய்துள்ளன. இந்தப் பணிகள் இன்று துவங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கட்டடத்தின் பழமையும், பெருமையும் மாறாத வகையில் புதுப்பிக்கும் பணி நடைபெறும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->