வாசனுக்கு மேலும் ஒரு முக்கிய பதவி
வேலூர்:
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன்நியமிக்கப்பட்டுள்ளார். அவரே இத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காகவாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
மேலும் காங்கிரசுடன் தமாகா இணைந்த போது வாசனுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியும்அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மற்றொரு முக்கியப் பதவியையும் காங்கிரஸ் அவருக்க அளித்துள்ளது. இது குறித்து வேலூரில்நிருபர்களிடம் வாசன் பேசுகையில்,
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக என்னை சோனியா காந்தி நியமித்துள்ளார்.
குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு படு தோல்வி கிடைக்கும். அக்கட்சியை மக்கள் சரியான முறையில்புரிந்து வைத்துள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சியை மக்கள் எப்போதோ தேர்வு செய்து விட்டனர். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுஆட்சியைக் கைப்பற்றும் என்றார் அவர்.
-->