கர்நாடகத்தில் பந்த்: ஆதரவே இல்லை
மைசூர்:
நாகப்பா கொல்லப்பட்டதைக் கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் இன்று கர்நாடகத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. ஆனால், சாம்ராஜ்நகர்,கொள்ளேகால், ஹாசன் ஆகிய பகுதிகள் தவிர வேறெங்கும் இந்த பந்துக்கு ஆதரவில்லை.
ஆனால், சாம்ராஜ்நகர், கொள்ளேகால், ராமபுரா, காமமெரே ஆகிய பகுதிகளில் இந்த பந்தையொட்டி கடைகள் மூடப்பட்டன. பள்ளிகளும்மூடப்பட்டிருந்தன. சில வாகனங்களும் தாக்கப்பட்டன.
அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பந்த்தையொட்டி சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும்பேருந்துகள் இன்று ரத்து செய்யப்பட்டன. ஆனால், ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந் நிலையில் நாகப்பாவை பாதுகாப்பாக மீட்கத் தவறிய கிருஷ்ணா அரசு பதவி விலகக் கோரி வரும் 13ம் தேதி மாநில அளவில் எதிர்ப்புதினம் அனுஷ்டித்து போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
இந் நிலையில் வீரப்பன் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரைநடத்தப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
-->