வீரப்பனை பிடிக்க உதவினால் ரூ. 2 கோடி பரிசு: கர்நாடகம் அறிவிப்பு
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க்க உதவுபவர்களுக்கு ரூ. 2 கோடி வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துளளது.
நாகப்பாவின் மர்மமான மரணத்தையடுத்து முதல்வர் கிருஷ்ணா தலைமையில் கூடிய கர்நாடக அமைச்சரவையில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது. முன்னதாக அமைச்சரவை நாகப்பாவுக்கு மெளன அஞ்சலி செலுத்தியது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும்அவரை உயிருடன் மீட்க முடியாததற்கு வருத்தத்தையும் தெரிவித்தது.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா,
வீரப்பன் கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய காட்டுப் பகுதிகளில் நடமாடி வருகிறான். இதனால் 3 மாநில முதல்வர்களின் கூட்டத்தைக்கூட்டி வீரப்பனை பிடிப்பது குறித்து பிரதமர் வாஜ்பாய் விவாதிக்க வேண்டும்.
3 மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து அவனைப் பிடிக்க கூட்டுத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
முன்பு வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.இந்தத் தொகையை ரூ. 2 கோடியாக அதிகரித்துள்ளோம்.
நாகப்பாவின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா.
-->