For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ்கள் தனியார்மயம்: கண்டித்து 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு பஸ்களை தனியாரிடம் விற்பதைக் கண்டித்து தமிழகத்தின் 11 நகரங்களில் வரும் 21ம் தேதி கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் செளந்தரராஜன் நிருபர்களிடம் பேசுகையில்,

அரசு பஸ்கள் நஷ்டத்தில் ஓடுவதாக அரசு கூறுவது நியாயமல்ல. அரசு பஸ்கள் கடந்த ஆறு மாதங்களாக லாபத்தில்தான் ஓடி வருகின்றன. அரசு நஷ்டக் கணக்கைக் காட்டினால் நாங்கள் லாபக் கணக்கை காட்ட தயார்.

அரசின் தனியார்மயமாக்கல் முடிவைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்தொடரும்.வரும் 21ம் தேதி சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறும்.

சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்துடன் தொழிலாளர்கள்கலந்துகொள்வர்.

அதேபோல, 30ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் ன்பு ஆர்ப்பாட்டம் நிடத்தப்படும் என்றார்அவர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X