சென்னையில் ஆட்டோ கேஸ் விற்பனை நிலையம் துவக்கம்
சென்னை:
சென்னை நகரில் முதல் முறையாக ஆட்டோக்களில் பயன்படுத்தப்டும் கேஸ் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோ கேஸ் விற்பனை மையத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்றுதுவக்கியது.
இந்த விற்பனை நிலையத்தைத் துவக்கி வைத்து இந்நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநர் ஜெயின்பேசுகையில், சென்னையை சுத்தமாகவும், சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரமாகவும் வைத்திருக்க இந்த ஆட்டோகேஸ் பெருமளவில் உதவியாக இருக்கும் என்றார்.
பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஒப்பிடுகையில், இந்த ஆட்டோ கேஸைப் பயன்படுத்தி ஓட்டப்படும் வாகனங்களில்புகை வருவதே இல்லை. ஆட்டோ கேஸின் விலை லிட்டருக்கு ரூ.19.5 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் ஆட்டோ கேஸ் பயன்படுத்துவதற்கான கருவியைப் பொருத்த ரூ.25,000வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆட்டோ கேஸ் விற்பனை நிலையங்கள் டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளன. அங்கு 15இடங்களிலும், மும்பையில் 10 இடங்களிலும் ஹைதராபாத், பெங்களூரில் தலா 2 இடங்களிலும் ஆட்டோ கேஸ்விற்பனை நிலையங்கள் உள்ளன.
சென்னையில் மேலும் 2 இடங்களில் விரைவில் இந்த விற்பனை நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டது.
-->