For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: ஈ.பி.டி.பிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (ஈ.பி.டி.பி.) எதிரான போராட்டம் வட-கிழக்கு இலங்கையில் தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து யாழ்பாணம் பகுதியில் வன்முறையும் வெடித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் வட-கிழக்கு இலங்கையில்செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கட்சியினரை டிசம்பர் இறுதிக்குள் தமிழர் பகுதியை விட்டு வெளியேறச் சொல்லியாழ்பாணத்திலும் பிற தமிழர் பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தப் போராட்டங்களை விடுதலைப் புலிகள் தான் பின்னால் இருந்து நடத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந் நிலையில் நேற்று யாழ்பாணத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி. எதிர்ப்புப் பேரணி நடந்தது.நெல்லியடி என்ற இடத்திற்கு இந்தப் பேரணி வந்தபோது அங்குள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்குள் சுமார்600 பேர் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தை அவர்கள் சூறையாடினர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இதில் பலர்படுகாயமடைந்தனர். இந்த மக்கள் மீது போலீசார் கிரனைட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏறகேனவே டெல்ப்ட் மற்றும் சாகவச்சேரியிலும் ஈ.பி.டி.பி. அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழர் பகுதியைவிட்டு வெளியேற மாட்டோம் என ஈ.பி.டி.பி. கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X