For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயாவுக்கு மதுரை மாணவர்கள் அனுப்பிய 23 அடி நீள கோரிக்கை மனு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது நீண்ட நாள்கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு 23 அடி நீளம் கொண்ட நூதன கோரிக்கை மனுவைஅனுப்பியுள்ளனர்.

இந்தப் பள்ளியில் உள்ள கூடைப் பந்து அணி, மதுரை மண்டல அளவில் கடந்த 1998ம் ஆண்டிலிருந்து முதல்பரிசைப் பெற்று வருகிறது.

ஆனால் மாணவர்கள் சரியான பயிற்சி மேற்கொள்வதற்கு உரிய வசதி பள்ளியில் இல்லை. மண் தரையில் பயிற்சிசெய்து, கான்க்ரீட் தரையில் விளையாடுவதற்கு சிரமமாக இருப்பதாக மாணவர்கள் கூறி வந்தனர்.

எனவே தங்களது பள்ளி மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தை கான்க்ரீட் தளமாக மாற்ற பல முறைஅதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

இதையடுத்து இது தொடர்பாக முதல்வரிடமே நேரடியாக மோதிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தஅவர்கள், தங்களது கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் இருப்பதால் நீளமான கோரிக்கையாக முதல்வருக்குஅனுப்பத் திட்டமிட்டனர்.

அதன்படி 23 அடி நீள காகிதத்தில் தங்கள் கோரிக்கையை எழுதி அதை ஜெயலலிதாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்காவது தகுந்த நடவடிக்கை இருக்குமா என்று மாணவர்கள் ஆவலுடன்காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X