டி.ஆர். பாலுவை புறக்கணித்த அண்ணா பல்கலை.
சென்னை:
ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளதனக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாததைக் கண்டித்து மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கவர்னருக்கு கண்டனக் கடிதம்அனுப்பிள்ளார்.
இது தொடர்பாக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகன் ராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
வழக்கமாக ஒரு அரசு கல்விக் கூடம் விழா நடத்தும்போது அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் தென் சென்னையில் அமைந்திருக்கிறது. அத் தொகுதியின் எம்.பி நான். என் தொகுதிக்கு உட்பட்டஇடத்தில் அமைந்திருந்தும் கூட அண்ணா பல்கலைக்கழகம் என்னை அதன் வெள்ளி விழாவுக்கு அழைக்கவில்லை. தமிழகத்தின்மத்திய அமைச்சர் என்ற முறையிலும் என்னை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.
பத்திரிக்கைகள் மூலமாகத் தான் இந்த வெள்ளி விழா நடப்பதையே நான் அறிந்தேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கூப்பிடுவதில்லை என்ற புதிய விதி எதையும் பல்கலைக்கழகம் கொண்டுவந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் டி.ஆர்.பாலு கேட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தின் நகல்களை ஜனாதிபதியின் செயலாளர், திமுக தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுஆகியோருக்கும் பாலு அனுப்பியுள்ளார்.
-->