For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வாலிபர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை:

திருமணமான பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த இரு வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சிவகங்கை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவ அலி முகம்மத் என்பவரின் மனைவி ஜெகரா (21). சமீபத்தில் வேலைவிஷயமாக அலி முகம்மத் சென்னை சென்றுவிட்டார். ஜெகரா மட்டும் வீட்டில் தனியே இருந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில்வசித்து வரும் பசீர்கான் என்பவர் இதை அறிந்திருந்தார்.

இந் நிலையில் வழக்கம்போல் அதிகாலையில் நீர் எடுக்க கிணற்றுக்குச் சென்ற அந்தப் பெண்ணை பசீர் கானும் அவரது நண்பர்சுல்தான் என்பவரும் வாயைப் பொத்தி தங்களது வீட்டு மாடிக்குக் கொண்டு சென்றனர்.

தப்பிக்க முயன்ற அந்தப் பெண்ணில் வாயில் துணியைத் திணித்து கட்டிப் போட்டனர். பின்னர் இருவருமே அந்தப் பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்தனர். அதை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர்.

வெளியே சொன்னால் வீடியோ கேசட்டை போட்டுக் காட்டி கேவலப்படுத்துவோம் என்று மிரட்டி பின்னர் அந்தப் பெண்ணைவிரட்டி விட்டனர். பயந்து போன அந்தப் பெண் வெளியில் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார். ஆனால், இதையே சாக்காகவைத்து பலமுறை மிரட்டி இருவரும் ஜெகராவை மீண்டும் மீண்டும் பாலியல்ரீதியில் துன்புறுத்தி வந்தனர்.

இதையடுத்து தனது கணவரிடம் ஜெகரா விஷயத்தைச் சொன்னார். இருவரும் சிவங்கை காவல் நிலையத்தில் அழுதவாறே புகார்தந்தனர்.

இதை விசாரித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியார் தலைமையிலான படையினர் இரு வாலிபர்களையும் கைது செய்தனர்.ஜெகராவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X