அருள் வந்ததாகக் கூறி நாட்டாமையை வெட்டிக் கொன்ற பெண்
திருத்தங்கல்:
சிவகாசி அருகே திருத்தங்கலில் தனக்கு அருள் வந்ததாகக் கூறி டான்ஸ் ஆடிய பெண், சாமி கும்பிட வந்த நாட்டாமையை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள் (45). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது கணவர் இறக்க, அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி என்ற நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சிவகாசி அருகே ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இந் நிலையில் நேற்று பழனியம்மாள்வீட்டில் உட்கார்ந்திருந்தபோது தனக்கு சாமி வந்துவிட்டதாகக் கூறி திடீரென டான்ஸ் ஆடினார்.
பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு தெருவில் ஓடினார். கையில்அரிவாளுடன் கண்களில் வெறியுடன் கத்திக் கொண்டே ஓடிய வந்த அந்தப் பெண்ணைக் கண்டு மக்கள் சிதறி ஓடினர்.
ஊருக்கு வெளியே உள்ள அய்யனார் கோவிலுக்குச் சென்றார் பழனியம்மாள். அப்போது அய்யம்பட்டியைச் சேர்ந்தநாட்டாமையான பால்சாமி (65) அந்த கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
திடீரென அவருக்குப் பின்னால் போய் நின்ற பழனியம்மாள், டேய் நீ தானே என்னைத் திட்டினே என்று கத்திக் கொண்டே அவரைஅரிவாளால் வெட்டினார். முதியவரான பால்சாமி கீழே விழுந்தார். வெறி கொண்ட அந்தப் பெண்ணிடம் இருந்து தப்பி ஓடினார்.
ஆனால், அவரை விரட்டிச் சென்ற அந்தப் பெண் அரிவாளால் வாயிலேயே பல முறை வெட்டினார். இந்த வாய் தானே என்னைத்திட்டியது என்று கூறிக் கொண்டே வெட்டினார்.
இதில் முகம் கிழிந்து பால்சாமி சிறிது நேரத்தில் கோவில் அருகிலேயே இறந்தார்.
இதன் பின்னர் தனது வீட்டுக்கு ஓடிப் போய் கதவைத் தாழிட்டுக் கொண்டார் பழனியம்மாள். சம்பவம் அறிந்து வந்த போலீசார்அவரைக் கைது செய்தனர்.
இவருக்கும் பால்சாமிக்கும் ஏதாவது முன் விரோதம் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதைத் தீர்த்துக் கொள்ள சாமிவந்ததாகக் கூறி நடித்து பால்சாமியை இந்தப் பெண் வெட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
-->