19 மாதத்தில் 23 அமைச்சர்கள் நீக்கம்: இது ஜெ. ஸ்டைல்
சென்னை:
கடந்த ஆண்டு மே 14ம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு கடந்த 19 மாதங்களில் இதுவரை 23அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துள்ளார்.
2001ம் ஆண்டு மே 14ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவைபதவியேற்றது.
அமைச்சரவை பதவியேற்ற 22-வது நாளிலேயே மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அய்யாறு வாண்டையார்,ஜெயராமன், விஸ்வநாதன் ஆகியோர் முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பெருமையைப்பெற்றனர்.
அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆலங்குடி வெங்கடாச்சலத்தை வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.
பின்னர் டான்சி விவகாரத்தால் ஜெயலலிதாவை செப்டம்பர் 20ம் தேதி வீட்டுக்கு அனுப்பியது நீதிமன்றம். அடுத்தநாளான 21ம் தேதி ஓ.பி. என்று அழைக்கப்படும் பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவைபதவியேற்றது.
ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்த செல்வராஜ் அதில் இடம் பெறவில்லை.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு கொலை கேஸில் சிக்கி வளர்மதி ஜெபராஜ் பதவியிழந்தார்.
மார்ச் 2ம் தேதி மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.
அப்போது ஓ.பியின் அமைச்சரவையில் இடம் பெற்ற அன்வர் ராஜா, பாண்டுரங்கன், எஸ்.எஸ்.திருநாவுக்கரசு,உப்பிலியாபுரம் சரோஜா, சண்கநாதன், சண்முகவேல், வைத்தியலிங்கம், ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்குஜெயலலிதா தனது அமைச்சரவையில் இடம் தரவில்லை.
அடுத்த சில மாதங்களில் அமைச்சர் துரைராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். காரணம், உயிருடன் குழந்தைகளைப்புதைக்கும் காட்டுமிராண்டி விழாவில் பங்கேற்று சர்வதேச அளவில் தமிழகத்தின் மானத்தை வாங்கியது.
அவருடன் சேர்த்து வ.து.நடராஜன், தனபால் ஆகியோரும் பதவியிழந்தனர்.
இப்படியாக, இப்போது தம்பித்துரையும், தளவாய் சுந்தரமும் பதவியிழந்துள்ளனர்.
இது மேலும் எப்போது வேண்டுமானாலும் தொடரலாம். இதற்கிடையே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் ஜெயலலிதாநினைத்தபோதெல்லாம் மாற்றி வருவது தனிக் கதை.
-->