For Quick Alerts
For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி அருகே கார்-லாரி மோதல்: 4 ஐயப்ப பக்தர்கள் பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே டாடா சுமோ காருடன் லாரி மோதியதில் காரில் வந்த 4 ஐயப்ப பக்தர்கள் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
ஆந்திராவிலிருந்து ஒன்பது ஐயப்ப பக்தர்கள் டாடா சுமோ காரில் சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே இன்று காலை இந்தக் கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்தலாரியுடன் பயங்கரமாக மோதியது.
இதில் கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது. காரில் வந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
மற்ற ஐந்து ஐயப்ப பக்தர்களும் காரின் டிரைவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
Comments
Story first published: Monday, December 16, 2002, 5:30 [IST]