2 வயதில் 30 கிலோ எடை: கரூர் சிறுவனின் பரிதாபம்
கரூர்:
ஹார்மோன் சுரப்பு அதிகரித்ததன் காரணமாக கரூர் அருகே ஒரு 2 வயது சிறுவனின் உடல் நாளுக்கு நாள்அதிகரித்து 30 கிலோ எடையுடன் அந்த சிறுவன் நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறான்.
கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவன் சிறுவன் ஜெயபாரத். இவனுக்கு 2 வயதாகிறது.
பிறந்த 6வது மாதத்திலிருந்து இந்தச் சிறுவனின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அவனுடையஉடல் எடை 30 கிலோவாக உள்ளது.
உடலில் வேறு எந்த நோயும் அவனுக்கு இல்லை. ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள்சிறுவனின் எடை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்த எடை காரணமாக சிறுவனால் நடக்கடியவில்லை. வழக்கமாக குழந்தைகள் சாப்பிடுவதைப்போலவே ஜெயபாரத்தும் சாப்பிடுவதாக அவனது பெற்றோர் கூறுகின்றனர்.
ஜெயபாரத்தைப் பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்க்கும்போது பெற்றோர்கள் கண்ணீர்வடிப்பது மிகவும் சோகமாக உள்ளது.
-->