குஜராத் வன்முறையில் ஒருவர் பலி
வதோதரா (குஜராத்):
குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதையடுத்து வதோதரா நகரில்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. பா.ஜ.க. அமோகமான வெற்றியைப் பெற்றுஅம்மாநிலத்தில் மீண்டும் நரேந்திர மோடியே முதல்வராகிறார்.
இந்நிலையில் வதோதரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான யோகேஷ் படேல் வெற்றி பெற்றார். இதையடுத்துபா.ஜ.கவினர் பதற்றம் மிகுந்த ராவ்புரா பகுதியில் பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
ஆனால் இந்த ஊர்வலத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அப்பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனங்கள்அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. அங்குள்ள பல கடைகளையும் வன்முறையாளர்கள் எரித்தனர்.
இந்தப் பயங்கரமான வன்முறையின்போது ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் 17 பேர்படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
நூற்றுக்கணக்கான போலீசார் விரைந்து சென்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளைவீசினர்.
ஆனால் வன்முறையாளர்கள் தொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடவே, அவர்களைப் போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தி விரட்டியடித்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து வதோதராவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நேற்று மாலை முதல்இரவு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இதையடுத்து பதற்றம் தணிந்ததால் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டது. மீண்டும்வன்முறை ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் இந்நகரில் குவிக்கப்பட்டனர்.
ஆனால் அதை மீறி இன்றும் பயங்கர வன்முறை ஏற்பட்டது. பானிகேட் பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவன்முறையாளர்களைக் கலைப்பதற்காக போலீசார் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
22ம் தேதி மோடி பதவியேற்பு:
இதற்கிடையே குஜராத் சட்டசபை பா.ஜ.க. உறுப்பினர்களின் தலைவராக மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று நடைபெற்ற புதிய பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து வரும் 22ம் தேதி குஜராத் முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்றுக் கொள்வார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->