For Daily Alerts
Just In
முதிய தம்பதியை கொன்று மகனும் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு அருகே சொத்தில் பங்கு தராத 75 வயது தந்தையையும், தாயையும் அரிவாளால் வெட்டிக் கொன்ற ஒருவர்பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த இந்த நபருக்கு வயது 45. தனது தந்தை தனக்கு சேர வேண்டியசொத்துத் தொகையை தர மறுத்ததால் ஆத்திரமடைந்தார்.
இதையடுத்து வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த 75 வயதுடைய தந்தையை அரிவாளால் சரமாரியாகவெட்டினார். இதில் அந்தப் பெரியவர் அங்கேயே இறந்தார்.
சப்தம் கேட்டு வந்த தாயாரையும் அரிவாளால் வெட்டினார். இதில் அவரும் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் ஈரோடுக்குச் சென்ற அவர் அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீசார் இந்தப் பயங்கரச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-->
Story first published: Monday, December 16, 2002, 5:30 [IST]