சிகரெட், மது பாட்டிலுடன் தோன்றும் டி.வி. நடிகர்கள் மீது ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
வாயில் சிகரெட்டும், கையில் மது பாட்டிலும் இல்லாமல் டிவி சீரியல்களில் நடிக்க முடியாது என்று கருதும்நடிகர்கள் நடிக்க வராமல் வேறு ஏதாவது வேலைக்குப் போவது நல்லது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
"தமிழன் டிவி" என்ற டிவி சானலின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவைத் தொடங்கி வைத்தடாக்டர் ராமதாஸ் பின்னர் பேசுகையில்,
சமீப காலமாக டிவி சீரியல்களில் தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமான காட்சிகள் பெரும்பாலும் வரத் தொடங்கிவிட்டன.
சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் வாயில் சிகரெட் புகையோடு வருவதையே ஸ்டைலாக மாற்றியுள்ளனர். இதுஇளைஞர்களைக் கெடுக்கும் செயலாகும்.
சிகரெட்டும், மதுவும் இல்லாமல் நடிக்க முடியாது என்றால் அவர்கள் நடிக்கவே தேவையில்லை. வேறு ஏதாவதுவேலைக்கு போகட்டும். தமிழர் கலாச்சாரத்தை கெடுக்கும் எந்த செயலையும் அனுமதிக்கவே முடியாது என்றார்ராமதாஸ்.
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் ஸ்டைலாகப் புகைபிடிப்பது தமிழக இளைஞர்களை மிகவும் கெடுத்து விட்டதாகக்கடந்த சில நாட்களாகக் கூறி வந்த டாக்டர் ராமதாஸ், தற்போது டி.வி. நடிகர்களையும் கடுமையாகத் தாக்கிப்பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், பாமக தலைவர் ஜி.கே. மணி, காங்கிரஸ் தலைவர்களில்ஒருவரான அன்பரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-->