ராணுவ சேர்க்கை தேர்வுக்கு வந்த இளைஞர்கள் ஆத்திரம்: இரும்பு கதவை உடைத்தனர்
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வுக்கு வந்த இளைஞர்கள், தேர்வு நடக்காததால்ஆத்திரமடைந்து நேரு ஸ்டேடியத்தின் இரும்புக் கதவைப் பெயர்த்து எடுத்துவிட்டனர்.
கோயம்பத்தூர் நேரு ஸ்டேடியத்தில் மூன்று நாட்களுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் தேர்வு நடப்பதாகஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில் ஸ்டேடியத்தின் கேட் திறக்கப்படாமலேயே இருந்தது. காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்தஇளைஞர்கள் கதவுகளைத் திறக்குமாறு கூறி, ஸ்டேடியத்தின் 13 அடி உயர இரும்புக் கேட்டை பிடித்து தட்டஆரம்பித்தனர். ஆனால் கேட் திறக்கப்படவில்லை.
இதையடுத்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து இரும்புக் கேட்டைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தனர்.அவர்கள் உலுக்க உலுக்க அந்த பிரமாண்டமான இரும்பு கேட் பிய்த்துக் கொண்டு விழுந்தது.
தகவல் அறிந்ததும் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா மகேந்திரன் விரைந்து வந்து இளைஞர்களைசமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் இதுவரை நடக்காதது என்றார் அவர்.
ராணுவ அதிகாரி கர்னல் வி.கே. சர்மா கூறுகையில்,
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி செவ்வாய்க்கிழமைதான் (இன்று) தொடங்குகிறது. திங்கள்கிழமை சான்றிதழ்சரிபார்ப்பு மட்டுமே நடந்தது.
ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத இளைஞர்கள் ஆவேசப்பட்டு கேட்டை உடைத்து விட்டனர் என்றார் சர்மா.
-->