For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி கைது புகழ் முத்துக்கருப்பனின் வழக்கு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்படுவதை எதிர்த்து மத்திய நிர்வாக டிரிப்யூனலில், முன்னாள் சென்னை மாநகரபோலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், இணை கமிஷனர் ஜார்ஜ், துணை கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோர்தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து டிரிப்யூனல் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்றுஅதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றுமாறு கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.

ஆனால் இதை எதிர்த்து மூன்று அதிகாரிகளும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாகவியல்நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாத்த நீதிபதி சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.அதில்,

மத்திய அரசுப் பணிக்கு மாற்றுமாறு கோரி மத்திய அரசு வெறும் கடிதம் மட்டுமே எழுதியுள்ளது. இறுதிஉத்தரவைப் பிறப்பிக்கவில்லை.

ஆனால் அதற்குள் முன் கூட்டியே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்குமுன்பே அதை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது.

எனவே மூன்று போலீஸ் அதிகாகளின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த மூன்று அதிகாரிகளில் ஜார்ஜ் இன்னும் அதே பதவியில் தான் உள்ளார். முத்துக்கருப்பன் பந்தாடப்பட்டுஇப்போது திருச்சி ஆயுதப் படைத் தலைவராக உள்ளார். அதிமுக மேலிடத்தில் செல்வாக்கோடு விளங்கிய முத்துக்கருப்பன் ஹோட்டல் சரவண பவன் அதிபரின் லீலைகள் விஷயத்தில் கெட்ட பெயர் வாங்கினார்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு ஆயுதப் படையில் இருக்கிறார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X