துண்டிக்கப்பட்ட கை விரல் மீண்டும் இணைப்பு: பாண்டிச்சேரி டாக்டர்கள் சாதனை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் 25 வயது நபருக்கு துண்டிக்கப்பட்ட ஆள் காட்டி விரலை மீண்டும் ஒட்ட வைத்து சாதனைபடைத்துள்ளனர் பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழக டாக்டர்கள்.
சுமார் 4 மணி நேரம் வரை நீடித்த இந்த அறுவைச் சிகிச்சை கடந்த 6ம் தேதி நடந்தது. டாக்டர் ஆபிரகாம் தாமஸ்,டாக்டர் சரத் ராமதாஸ், டாக்டர் அருண், டாக்டர் ரத்னா ஆகியோர் அடங்கிய குழு இந்த அறுவைச் சிகிச்சையைவெற்றிகரமாக செய்தது.
விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட இளைஞர் ஆனந்த்திற்கு உடனடியாகஅறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால்தான் விரலை வெற்றிகரமாக மீண்டும் சேர்க்க முடிந்ததாக டாக்டர் ஆபிரகாம் தாமஸ் தெரிவித்தார். இவர்இதற்கு முன் பலமுறை இதுபோன்ற அரிய அறுவைச் சிகிச்சைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் ஏழை என்பதால் அவரிடம் வெறும் ரூ.2,000 மட்டுமே வசூலிக்கப்பட்டதாக டாக்டர் சரத் ராமதாஸ்தெரிவித்தார். இந்த அறுவைச் சிகிச்சைக்கு ரூ.40,000 செலவானது குறிப்பிடத்தக்கது.
-->