For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ கைதை எதிர்த்து "ஒரு கோடி கையெழுத்து": கருணாநிதி துவக்கினார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒரு கோடிகையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தை அக்கட்சி தொடங்கியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி முதல்கையெழுத்தைப் போட்டு அந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த ஜூலை 11ம் தேதி கைது செய்யப்பட்ட வைகோ, வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வைகோ தவிர மேலும் ஒன்பது மதிமுகவினரும் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டது அநீதியானது என்பதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு கோடிகையெழுத்துக்களைப் பெறும் இயக்கம் ஒன்றை மதிமுக தொடங்கியது. இது தொடர்பாக மதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

மேலும் முதல் கையெழுத்தை கருணாநிதியிடம் வாங்கவும் மதிமுகவினர் முடிவு செய்தனர்.

அதன்படி சென்னை-கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன்தலைமையில் அக்கட்சியினர் சென்றனர்.

"ஒரு கோடி கையெழுத்து" இயக்கம் பற்றி கருணாநிதியிடம் கணேசன் விளக்கிக் கூறினார். பொடா சட்டத்தில்வைகோ கைது செய்யப்பட்டதை ஆரம்பத்திலேயே தான் கண்டித்ததை அப்போது நினைவுபடுத்தினார் கருணாநிதி.

பின்னர் மதிமுகவினர் கொண்டு சென்ற ஒரு படிவத்தில் முதல் முதலாக கருணாநிதி தன் கையெழுத்தைப் போட்டார்.

"பொடா சட்டத்தின் கீழ் மதிமுகவினரைச் சிறையில் அடைத்த தமிழக அரசின் நடவடிக்கை அநீதியானது. இதற்காகஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்தப் படிவத்தில் டைப்செய்யப்பட்டிருந்தது. அதன் கீழ் முதல் கையெழுத்தைப் போட்டார் கருணாநிதி.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X