For Daily Alerts
Just In
ரூ.10 லட்சம் போலி பால் பேரிங்குகள் பறிமுதல்: 3 பேர் கைது
சென்னை:
பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பால் பேரிங்குகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனையாகும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பால்பேரிங்குகள் மற்றும் பிற உதிரிப் பாகங்களை சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாகப்போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சென்னை பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் ஒரு கடையில் போலீஸார் திடீர் சோதனைநடத்தினர்.
அப்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள போலி பால் பேரிங்குகளை போலீஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டனர்.
-->
Comments
Story first published: Wednesday, December 18, 2002, 5:30 [IST]