மதுரை அருகே காலரா: அதிகாரிகளின் அலட்சியத்தால் 7 பேர் பலி
மதுரை:
மதுரை அருகே முத்தப்பன்பட்டி என்ற கிராமத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலரா நோய் காரணமாக 7பேர் பலியாகியுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது முத்தப்பன்பட்டி. இந்தக் கிராமத்தில் கடந்த 6 மாதமாக ஒன்றியமேல் நிலை நீர்த் தொட்டி மூலம் விநியோகமாகும் குடிநீர் சுத்தமில்லாமல், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் 7 பேர் வரை காலரா மற்றும் வாந்தியால் உயிரிழந்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து குடிநீர்த் தொட்டியையும், குடிநீர் இணைப்புகளையும்சோதனையிட்டுச் சென்றனர். ஆனால், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் இப் பகுதியில் வாந்தியும், வயிற்றுப்போக்கும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதைத் தொடர்ந்துஇந்தக் குடிநீரைப் பயன்படுத்தவே மக்கள் அஞ்சி வருகின்றனர். ஆனால், வேறு வழியில்லாததால் அதைத் தான்பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் இந்தத் தண்ணீரைக் குடித்து வருகின்றனர் இந்தப் பகுதி மக்கள்.இனியாவது அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை.
-->