For Daily Alerts
Just In
கஞ்சா விற்ற "தேசப்பற்று", மலர்
சென்னை:
கஞ்சா மற்றும் பிற போதை மருந்துகளை விற்றதாக சென்னையைச் சேர்ந்த தேசப்பற்று, மலர் என்ற பெண்களைசென்னை போலீசாரால் கைது செய்தனர்.
காசி மேடு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தபோது இரண்டு பெண்களைப் போலீசார் கைது செய்தனர்.
விசாரித்த போது அவர்களுடைய பெயர்கள் தேசப்பற்று மற்றும் மலர் என்பது தெரிய வந்தது.
கஞ்சாவைத் தவிர போதை மருந்துகள் மற்றும் போதை ஊசிகளையும் அவர்கள் விற்று வந்தது தெரிய வந்தது.
அந்தப் பெண்களிடமிருந்து கஞ்சா, 200 பாட்டில் போதை மருந்து, ஊசிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்தனர்.
-->
Comments
Story first published: Friday, December 20, 2002, 5:30 [IST]