திருமணத்துக்கு மறுத்த மாமன் மகளுக்கு கத்திக்குத்து: இளைஞர் தற்கொலை
சென்னை:
தன்னைத் திருமணம் செய்ய மறுத்த மாமன் மகளையும், வேறு 3 பெண்களையும் கத்தியால் குத்திய இளைஞர்பின்னர் மின்சார ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியச்ை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன்கள் புகழேந்தி மற்றும் செல்வம்.
மாசிலாமணியின் வீட்டிலேயே செல்வத்தின் தாய்மாமன் ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தினரோடு வசித்துவருகிறார். அவருக்கு மனைவி கெளரி, மகள்கள் ராணி மற்றும் மாலதி ஆகியோர் உள்ளனர்.
ராணியை செல்வம் சில காலமாகக் காதலித்து வந்தார். முதலில் அதற்கு சம்மதித்த ராணி, பின்னர் செல்வம் சரியாகவேலைக்குப் போகாமல் ஊர் சுற்றி வந்ததால் காதலை மறுத்து விட்டார்.
ஆனால் கட்டினால் ராணிதான் என்று விடாப்பிடியாக அவரையே சுற்றி வந்து கொண்டிருந்தார் செல்வம். ஆனால்ராணி அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.
இதையடுத்து தனது வீட்டிலும், தாய்மாமன் வீட்டிலும் ராணியை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு செல்வம்கேட்டுள்ளார். ஆனால் இரு குடும்பத்தினருமே இதற்கு மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்றும் இது தொடர்பாகப் பேச்சு எழுந்து, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்தசெல்வம் தன்னிடமிருந்த கத்தியால் கெளரி, ராணி, மாலதி, புகழேந்தியின் மனைவி வள்ளி ஆகியோரைசரமாரியாகக் குத்தினார்.
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய செல்வம் நேராக ராயபுரம் சென்றார். அங்கு மின்சார ரயில் முன் பாய்ந்துதற்கொலை செய்து கொண்டார். காயமடைந்த 4 பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-->