தமிழகத்தில் பெண்களுக்காக 5 சிறப்பு தொழிற் பூங்காக்கள்
சென்னை:
தமிழத்தில் பெண்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் தொழில் நிறுவனங்களைக் கொண்ட 5 தொழிற் பூங்காக்கள் (Industrialparks) விசேஷமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இத் தகவலை மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வடிவேல்தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயில், திருச்சி, சேலம், மதுரை,கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் இந்த தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
திருமுல்லைவாயிலில் அமையும் தொழிற் பூங்கா 290 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல்மகளிர் தொழில் முனைவோருக்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு பெண்களே தொழில் நிறுவனங்களை அமைக்கலாம்.
திருச்சி, சேலத்தில் தலா 51.7 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும்.
கோவையில் 35 ஏக்கர் நிலப்பரப்பிலும் மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் இந்தபூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
-->