பூமிக்குள் புதைந்த வயல்கள்.. விவசாயிகள் பீதி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள சில கிராமங்களில் திடீரென்று வயல்கள் பூமிக்குள் புதைந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து தற்போதுதான் ஓய்ந்துள்ளது. இதையடுத்துவிவசாயிகள் நெல் நடவை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில், சில இடங்களில் நெற் பயிற்கள் பயிரிடப்பட்டுள்ளவயல்கள், சில அடி கீழே இறங்கியுள்ளன.
இது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்திமரப்பட்டி, குள்ளக்காடு, முத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் நெல் வயல்கள் 10 மீட்டர் அளவுக்குமண்ணுக்குள் இறங்கியுள்ளன.
சிறிய அளவில் பூகம்பம் ஏற்பட்ட காரணமாகவே நெல் வயல்கள் தரைக்குள் இறங்கியிருப்பதாக விவசாயிகள்கூறுகின்றனர். ஆனால், நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையங்களிலும் பதிவாகவில்லை.
இதனால் பல பகுதிகளில் நெல் நடவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வயல் பக்கம் போகவே விவசாயிகள்அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தப் பகுதியில் மின் கம்பங்கள் மண்ணில் புதைந்து வந்தன. இதையடுத்து புவியியல் வல்லுனர்களைக் கொண்டுமத்திய, மாநில அரசுகள் ஆய்வு நடத்தின. ஆய்வு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் வயல்களே பூமிக்குள் புதைந்துள்ளது இப் பகுதியில் படிப்பறிவில்லாத ஏழை விவசாயிகளிடையேபீதியை உருவாக்கியுள்ளது.
-->