For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத்தான் வேதம் ஓதுவதா?: ஜெ.வுக்கு இளங்கோவன் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பஸ் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்களை வீட்டுக்குஅனுப்பி குடும்பங்களைப் பட்டினி போட்டுவிட்டு 5 வருடத்திற்குள் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று ஜெயலலிதா கூறுவது சாத்தான் வேதம் ஒதுவது போல இருக்கிறது என்று காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில், 5வருடத்திற்குள் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.அதை ஜெயலலிதா வழிமொழிந்துள்ளார்.

தமிழகத்தில் 10,000 சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியாகி விட்டது. 50,000க்கும் மேற்பட்டபோக்குவரத்து ஊழியர்களை அடுத்து வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு வி.ஆர்.எஸ். கொடுத்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி தனியார்மயமாக்கல் கொள்கை என்ற காரணத்தைக் காட்டி லட்சக்கணக்கான பேரை வேலையிழக்கச்செய்து குடும்பங்களை பட்டினி போட்டுவிட்டு, 5 வருடத்தில் 5 கோடி பேருக்கு வேலை தர வேண்டும் என்றுஜெயலலிதா சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.

இப்படிக் கூறுவதற்கு ஜெயலலிதாவும், வாஜ்பாயும் தகுதியானவர்கள் அல்ல என்று கூறியுள்ளார் இளங்கோவன்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X