For Daily Alerts
Just In
சென்னையைக் கலக்கும் மூடு பனி
சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி (fog) இருந்து வருகிறது.இதனால் காலை 8 மணி வரை வாகனங்கள் ஓட்டுவது, விமானங்களை இயக்குவது சிரமமாக உள்ளது.
மார்கழி மாதம்தொடங்கி நடுக்கமாக நகர்ந்து வருகிறது. இரவில் ஆரம்பித்து காலை 8 மணி வரை மூடுபனிபரவுகிறது.
இதனால் காலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. அத்தோடு விமானங்களைஇயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தினசரி காலை 9 மணிக்கு மேல்தான் விமானங்கள் இயக்கப்படுவதாகமீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி நாயர் தெரிவித்துள்ளார்.
இந்த மூடுபனி, ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குப் பிறகு வறுத்தெடுக்கப் போகும் வெயிலை நினைத்து, இந்தப் பனியை ரசித்து வருகின்றனர் சென்னைமக்கள்.