ரசிகர் மன்றங்களுக்குத் தடை விதிக்க பா.ம.க. கோரிக்கை
மதுரை:
இளைய சமுதாயத்தின் சக்தியை முறைப்படும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்றங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இக் கட்சியின் இளைஞர் பிரிவின் மாநாடு வரும் 28ம் தேதி மதுரையில் நடக்கிறது. ரசிகர் மன்றங்களைத் தடை செய்வதையேஇந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட உள்ளது.
இது குறித்து கட்சியின் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தின் இளைஞர் சக்தி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தீவிரவாத அமைப்புகள் ஒரு பக்கம் வாலிபர்களை தவறானபாதையில் திசை திருப்பி விட்டு வருகின்றன. அதோடு ரசிகர் மன்றங்கள் இன்னொரு பக்கம் வாலிபர்களை வீணடிக்கின்றன.
இளைஞர்களை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. இதன் முதல்படியாகத் தான் ரசிகர் மன்றங்களைத்தடை செய்யச் சொல்கிறோம்.
அதே போல உடனடி லாட்டரிகளையும் தடை செய்ய வேண்டும். இதில் லட்சக்கணக்கான ஏழைகள் பணத்தை இழந்துவருகின்றனர்.
அதே போல தமிழகத்தை முறையாக நிர்வாகம் செய்ய மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது தான் சரி என்றார்.
-->