ஆசிரிகளின் சலுகை பறிப்பு: அரசு உத்தரவுக்கு கோர்ட் தடை
சென்னை:
கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பதவியில் நீடிக்க முடியாதுஎன்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறும் ஆசிரியர்கள்,அப்போதே பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள், கல்வியாண்டின் இறுதி வரை அவர்களுக்கு பதவிநீட்டிப்புதரப்பட மாட்டாது என்று சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆண்டாண்டு காலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த சலுகையை தமிழக அரசு திடீரென ரத்துசெய்தது. இதை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அரசின்விளக்கத்திற்குப் பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.