கேள்வித் தாள் அவுட்: சிபிசிஐடி விசாரணைக்கு அண்ணா பல்கலை. பரிந்துரை
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.இ தேர்வுக்கான வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ்விசாரணைக்கு உத்தரவிடுமாறு கல்வித்துறைக்கு பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பி.இ மற்றும் பி.டெக் படிப்புகாகன மெக்கானிக்ஸ் செமஸ்டர் தேர்வு வினாத்தாள் தேர்வுதினத்தனறு காலையிலேயே வெளியானது.
இதையடுத்து அந்தத் தேர்வே ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க பேராசிரியர்கள் ராமைய்யா, நடேசன்,ஜனகராஜன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழு விசாரணை நடத்தி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில்தான் கேள்வித்தாள்வெளியாகியிருக்கக் கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. திருநெல்வேயில் உள்ள ஒரு கல்லூரி உள்பட சிலகல்லூரிகள் மீது சந்தேகம் உள்ளதாக அக் குழு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் சம்பந்தம் உடையவர்களை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக கல்வித்துறைக்கு அவர் பரிந்துரைக் கடிதமும் அனுப்பியுள்ளார்.
தவறு செய்த கல்லூரியின் அங்கீகாரத்தையே நிரந்தரமாக ரத்து செய்வோம் என அவர் ஏற்கனவே எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.