For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவில் நகை கடைகளில் ரெய்ட்: ரூ.1.5 கோடி தங்கம் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாகர்கோவில் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது ஒரே நாளில் ரூ.1.5 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்செய்யப்பட்டன.

கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், மக்கள் தங்க நகைகளைவாங்கிக் குவித்துக் கொண்டுதான் உள்ளனர்.

ரம்ஜான், கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. நகைகள் விற்பனையும் அமோகமாகநடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி மண்டல வருமான வரித் துறை அதிகாரிகள் நாகர்கோவில் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் நேற்று திடீரென்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது சில கடைகளில் ஏராளமான தங்கக் கட்டிகளும், நகைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைஅதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவை அனைத்தும் முறையான ஆவணங்கள் இல்லாமலும், வருமான வரி செலுத்தாமலும் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று தெரிய வந்துள்ளது.

ஒரே நாளில் இந்த அளவுக்கு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவற்றைத் தவிர மேலும் சில முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி, அவை குறித்துத் தொடர்ந்துவிசாரித்து வருகின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X