For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் 20 பாஜக எம்.எல்.ஏக்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் சாவுக்குப் பொறுப்பேற்று முதல்வர் கிருஷ்ணா ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி சட்டசபை முன் தர்ணாவில் இறங்கிய 20 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா கடந்த 8ம் தேதி மார்பில் குண்டு பாய்ந்த நிலையில்பிணமாகத்தான் மீட்கப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.

நாகப்பா மரணம் தொடர்பாக விவாதிப்பதற்காக கடந்த 23ம் தேதி முதல் கர்நாடக சட்டசபையின் சிறப்புக் கூட்டம்நடந்து வருகிறது. கூட்டம் தொடங்கிய நாளிலிருந்தே பா.ஜ.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர்சட்டசபைக்குள் கடுமையான ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த கூட்டத்தின் போதும் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கடும் ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து,அவர்களை இந்தத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய சபாநாயகர் உத்தரவிட்டார்.

இருந்தாலும் கிருஷ்ணா அரசுக்கு எதிராக பா.ஜ.கவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுவிதான செளதாவுக்கு முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணா பதவி விலகும் வரை ஓயப் போவதில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள்அப்போது கோஷம் போட்டனர்.

இதையடுத்து 20 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர்கள்அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சட்டசபையிலிருந்து தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை எந்தவிதமான முன்நிபந்தனையும் இன்றி வாபஸ் பெற வேண்டும் என்று சபாநாயகரை பா.ஜ.க. தலைவரான ஜெகதீஷ் சத்தார்வலியுறுத்தியுள்ளார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X