பணப் பிரச்சனை தீர காளியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
சென்னை:
அம்மன் கோவில்களில் பூ அலங்காரம், புஷ்ப அலங்காரம் என விதவிதமான அலங்காரங்களை செய்து அம்மனைவழிபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அம்பத்தூரில் வித்தியாசமாக ரூபாய் நோட்டுக்களால் ஒரு அம்மனுக்குஅலங்காரம் செய்யப் போகிறார்கள்.
சென்னை அருகே உள்ள தொழில் நகரம் அம்பத்தூர். இங்குள்ள பிரபலமான கோவில் ஸ்ரீபத்ரகாளி அம்மன்திருக்கோவில்.
இந்தக் கோவிலில் உள்ள காளியம்மனுக்கு, வரும் புத்தாண்டு தினத்தன்று கரன்சி நோட்டுக்களால் அலங்காரம்செய்து வைக்கப் போகிறார்கள்.
பிறக்கப் போகிற புத்தாண்டு முதல் அனைவரும் சுபிட்சமாகவும், வறுமை ஒழிந்து, பணப் பற்றாக்குறை இன்றிவாழவும் அம்மனை வேண்டி இந்த கரன்சி நோட்டு அலங்காரம் செய்யப்படவுள்ளது.
அம்மனின் கிரீடம், சூலம் ஆகியவை கரன்சி நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதுதவிர அம்மனுக்குகரன்சி மாலையும் அணிவிக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-->