வினாடி- வினாவில் "லிம்கா" சாதனை
சென்னை:
பிரபல வினாடி-வினா (குயிஸ்) தொகுப்பாளரான கிரி பாலசுப்பிரமணியம், சென்னையில் நடந்த ஒருவினாடி-வினா போட்டியில் ஒரே நாளில் 522 கேள்விகள் கேட்டு "லிம்கா" சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இன்டியாஇன்போவின் குயிஸ்பிரெய்ன் டாட் காம் (www.quizbrain.com) பொதுஅறிவு இணையத் தளத்தின்ஆசிரியராக உள்ளார் கிரி.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இணையத் தளத்தை நடத்தி வரும் கிரி நாடு முழுவதும் ஏராளமானவினாடி-வினா போட்டிகளையும் நடத்தியவர். டாடா கன்சல்டன்ஸி சாப்ட்வேர் நிறுவனத்தின் சார்பில் நாடுமுழுவதும் பல வினாடி-வினா போட்டிகளை கிராமப் பகுதிகளில் நடத்தி வருகிறார்.
இந்தியாவின் முதல் சாப்ட்வேர் வினாடி-வினா புத்தகமான Know IT Better என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு மெகா வினாடி-வினா போட்டியில்தான் கிரியின் "லிம்கா" சாதனைநிகழ்த்தப்பட்டது. அந்தப் போட்டியில் 522 கேள்விகளைக் கேட்டு இந்தச் சாதனையைப் படைத்தார் கிரி.
வினாடி-வினா போட்டிகளில் ஒரே நாளில் இத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது இதுதான் முதல் முறை என்கிறது"லிம்கா".
இதன்மூலம் பி.பி.சியில் வினாடி-வினாப் போட்டிகளை நடத்தி வரும் சித்தார்த்த பாசு மற்றும் புகழ்பெற்றவினாடி-வினா தொகுப்பாளரான டெரக் ஓ பிரையன் ஆகியோரின் வரிசையில் கிரியும் இடம் பெற்றுவிட்டார்."வால்ட் டிஸ்னி", "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் இவர்.
"லிம்கா" சாதனை செஞ்சாச்சு... அடுத்து என்ன என்று கிரி பாலசுப்பிரமணியத்திடம் கேட்டால், "வேறு என்ன?"கின்னஸ்" சாதனைக்கான முயற்சிதான்" என்கிறார். ஆல் த பெஸ்ட்.
-->