For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காட்டுப் பகுதியில் பிணம் மீட்பு: வீரப்பன் கொன்றானா?

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

வீரப்பன் தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில் காட்டுப் பகுதியில் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.

குண்டுக் காயங்களுடன் கிடந்த அந்த நபர் யார் என்று தெரியவில்லை. வீரப்பன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து சில தகவல்கள்கிடைத்ததையடுத்து தமிழக- கர்நாடக அதிரடிப்படையினர் மாதேஸ்வரன் மலைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

கடந்த 3 நாட்களாகவே இதுவரை இல்லாத அளவுக்கு வீரப்பன் வேட்டை சூடு பிடித்துள்ளது. 3 ராணுவ ஹெலிகாப்டர்களும்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அவை காட்டுப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றன.

இந் நிலையில் கோணக் கரை என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் ஒரு பிணம் கிடந்தது. இவர் யார் என்று தெரியவில்லை. வீரப்பன்கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பதும் தெரியவில்லை. இந்த உடலில் பல குண்டுக் காயங்கள் இருந்தன.

இந்த உடலை அதிரடிப்படையினர் மீட்டு மாதேஸ்வரன் மலை மருத்துவமனையில் வைத்துள்ளனர். இவரை அடையாளம்கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே வீரப்பன் வேட்டைக்கு கர்நாடகம் கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. இதற்காக பெங்களூர், மைசூர், குல்பர்கா,மங்களூர் ஆகிய இடங்ளில் இருந்து சுமார் 1,000 ரிசர்வ் போலீஸ் படையினர் மாதேஸ்வரன் மலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வீரப்பனை சுமார் 10 கி.மீ. தொலைவுக்குள் சுற்றி வளைத்துவிட்டதாக அதிரடிப்படையினர் நம்புகின்றனர்.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X